ஆப்நகரம்

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வக்கீலிடம் நகை கொள்ளை

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வக்கீலிடம் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் நகைகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களில் எடுத்துச் செல்வது சிறந்தது.

Samayam Tamil 20 May 2019, 2:47 pm
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வக்கீலிடம் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3cf712a2-cf59-4e07-a519-f882d89c5e78


மதுரை அய்யர் பங்களா அருகில் உள்ள அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகள் பூங்கொடியாள்(35) வழக்கறிஞராக உள்ளார். இவர் டூவீலரில் உத்தங்குடி சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவரை ஒரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின்தொடர்ந்து வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென பூங்கொடியாள் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து வழக்கறிஞர் பூங்கொடியாள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் நகைகளை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் பெண்கள் பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களில் எடுத்துச் செல்வது சிறந்தது. ஹெல்மெட் அணிந்து வரும் திருடர்கள் பெண்களை குறிவைக்கின்றனர்.

அடுத்த செய்தி