ஆப்நகரம்

தேனியில் பரிதாபம்.. 100 அடி கிணற்றில் 3 குழந்தைகளுடன் குதித்த பெற்றோர்..!

தேனி அருகே ஒரே குடும்பத்தை 5 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட நிலையில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 7 Feb 2023, 8:04 pm
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழ பயன்படாத மொட்டை கிணற்றில் சத்தம் வருவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
Samayam Tamil theni


விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கிணற்றை சுற்றி வளர்ந்திருந்த செடிகளை பொதுமக்களுடன் சேர்ந்து அப்புறப்படுத்தி கிணத்தில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது,
பொட்டிப்புரம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராமராஜ் மற்றும் அவருடைய மனைவி வீரமணி மற்றும் அவருடைய மூன்று குழந்தைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பொட்டிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் (31). விவசாயியாக இவர் அதே பகுதியில் உள்ள கிணற்றில் தனது மனைவி வீரமணி (24), குழந்தைகள் ராஜபாண்டி (6), ஈஷா(3), ஜீவிதா (2) ஆகியோருடன் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தீயணைப்பு வீரர்கள் ‌மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தனர். ஈஷா ஜீவிதா ஆகிய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மார்க்கெட் ரவுடியை சுட்டு பிடிக்கும் போலீஸ்... பரபரப்பான காட்சி..!

ராம்ராஜ், வீரமணி மற்றும் 6 வயது சிறுவன் ராஜபாண்டி மூவரும் பலத்த காயங்களுடன் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து மேல்சிகிச்சைக்காக மூவரும் கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி