ஆப்நகரம்

கொலை மிரட்டல் வழக்கு; அதிமுக முன்னாள் அமைச்சர் மனு விசாரணை

அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான புகாரில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது.

Samayam Tamil 17 Feb 2023, 6:52 pm
கொலை மிரட்டல் வழக்கில் முன் ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil chennai hc case


தனக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விற்க மறுத்ததால், தனது தோட்டத்தை நாசம் செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனுக்கு எதிராக நீலகிரி மாவட்டம், மணிக்கல் பகுதியை சேர்ந்த ராஜு என்பவர் மஞ்சூர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் புத்திசந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி புத்திசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாளர்.

அதில், புகார்தாரர் ராஜுவின் சகோதரரின் 12 சென்ட் நிலத்தை தான் வாங்க முயற்சித்ததாகவும், அதற்கு ராஜு தேவையற்ற பிரச்சனை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் புகார்தாரர், ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால், தனக்கு எதிராக பொய் புகார் அளித்ததாகவும், அவர் கூறுவது போல எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்பதால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், மஞ்சூர் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

அடுத்த செய்தி