ஆப்நகரம்

கோவை: இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு...

கோவை மாவட்ட இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 10 Mar 2020, 3:49 pm
கோவை கோணார் வீதியில் இந்து முன்னணி மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை பத்து மணிக்கு அலுவலக ஊழியர் அலுவலகத்தை திறக்க வந்தபோது உடைந்த பாட்டில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Samayam Tamil இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு


உடனே அவர் இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் கிடைக்க சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சட்டம் ஒழுங்கு துனை ஆனையர் பாலாஜி இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.


மேலும் அங்கு அருகில் சிசிடிவி கேமராவில் சம்பவம் தொடர்பாக பதிவாகி உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சோதனை செய்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சு காரணமாக அலுவலகத்துக்கு போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.

மனைவி பசியாக வருவாள்..! கடாயை திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...

கடந்த சில நாடுகளுக்கு முன்னதாக சென்னை அண்ணாசாலையில் மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் வீசப்பட்டிருக்கும் பெட்ரோல் குண்டு சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி