ஆப்நகரம்

மாணவனை காலால் எட்டி உதைத்த ஆசிரியருக்கு கைவிலங்கு..!

சிதம்பரம் அருகே மாணவனை காலால் எட்டி உதைத்த பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 14 Oct 2021, 8:58 pm
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சுப்ரமணியன் என்ற ஆசிரியர் இயற்பியல் வகுப்பு எடுத்து வருகிறார். இந்நிலையில், 12ம் மாணவர்கள் சிலர் சுப்பிரமணியனின் வகுப்பில் கட் அடித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
Samayam Tamil viral video


இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணியன் கடந்த புதன்கிழமை அன்று 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலரை வகுப்புக்குள் வைத்து பிரம்பால் அடித்து கதற வைத்தார். மேலும், மாணவர்கள் மன்னிப்பு கேட்டு கதறியும் அவர்களை கீழே தள்ளி காலால் எட்டி உதைத்துள்ளார்


இந்த நிகழ்வை செல்போனில் வீடியோ எடுத்த மாணவர்கள் அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இதன் காரணமாக ஆசிரியர் சுப்ரமணியன் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

கணவனுக்கு மயக்க பால், டிரைவருடன் உறவு... எப்டிலாம் பிளான் பண்றாங்க..!

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவன் தரப்பில் கொடுத்த புகாரின் பேர்ல் ஆசிரியர் சுப்பிரமணியனை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்து. கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மாணவர்கள் தவறு செய்தால் அவர்களை அடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் சுப்ரமணியன் காலால் எட்டி உதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி