ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்! சிறுவன் கைது...

கிருஷ்ணகிரி அருகே பள்ளி பள்ளி மாணவியை திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சக மாணவர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 25 Feb 2020, 1:49 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த ப்ளஸ் ஒன் படித்த வந்த மகளை மயக்கம் அடைய செய்து கூட்டு பலாத்காரம் செய்து விட்டதாக மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samayam Tamil கிருஷ்ணகிரியில் பிளஸ் ஒன் மாணவி கூட்டு பலாத்காரம்


வேப்பனப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் காத்துக்கிடந்தார். அப்போது அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படுத்து வரும் 16 வயது மாணவன் அங்கு வந்துள்ளார் . அந்த மாணவன் ஏற்கெனவே மாணவிக்கு அறிமுகமானவர்.


அதனால் மாணவி அவருடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து அந்த மாணவனின் நண்பர்களான ராஜா, மஞ்சிநாத் ஆகிய இருவரும் அங்கு வந்தனர். அப்போது மாணவிக்கு அவர்கள் குடிப்பதற்காக குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். அதை வாங்கி பருகிய மாணவி சில நேரத்தில் மயக்கியுள்ளார். இதையடுத்து மாணவியை மூவரும் காரில் ஏற்றிக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு மயக்க நிலையில் இருந்த மாணவியை மூன்று பெரும் மாறி மாறி கூட்டு பலாத்தகராம் செய்துள்ளனர். பின்னர் மயக்கம் தெளிந்த மாணவி அங்கிருந்து தப்பி தனது வீட்டுக்கு வந்தடைந்தார். பின்னர் கதறி அழுதுகொண்டே நடந்தவற்றை குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ம்ம்ம்... தனியா இருக்கியா..? இந்த நம்பருக்கு கால் பண்ணு... சொக்க வைத்த பெண் குரல்.!

சம்பவத்தை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியுடன் பேசி வந்த 16 வயது மாணவனை பிடித்து போக்சோ வழக்கில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் மஞ்சிநாத்தை தேடி வருகின்றனர். பட்ட பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் மாணவியை மயக்கமாகி கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி