ஆப்நகரம்

பாவம் ஆட்டோ டிரைவர்; பிளஸ் டூ மாணவர்கள் செய்த பயங்கரம்- அதிர்ச்சி சம்பவம்!

ஆட்டோ டிரைவரை பள்ளி மாணவர்கள் அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Sep 2019, 2:25 pm
செங்கல்பட்டு அனுமந்த புத்தேரி பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார்(35). இவர் ஷேர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி சவாரியை முடித்துவிட்டு, பாரதியார் தெருவில் வந்து கொண்டிருந்தார்.
Samayam Tamil Attack


அப்போது பள்ளி சீருடை அணிந்திருந்த 3 பிளஸ் டூ மாணவர்கள் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ஆட்டோ மீது மோதினர்.

பிரசாதத்தில் விஷம்: மனைவியின் உயிரை காப்பாற்றி விட்டு கணவன் பலி.!

இதனால் கோபமடைந்து திலீப்குமார் மாணவர்களை கண்டித்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருதரப்பிற்கு இடையே மோதல் உண்டானது.

அதில் திலீப்குமாரை மாணவர்கள் கடுமையாக தாக்கினர். அதில் படுகாயமடைந்து திலீப்குமார் கீழே விழுந்தார். இதைக் கண்ட பொதுமக்கள், உடனே அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூரில் 6 சிறுவர்களிடம் பாலியல் வன்முறை: அன்பு இல்லம் நிறுவனர் கைது!!

அதேசமயம் மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் திலீப்குமார் உயிரிழந்தார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், பத்மேஷ் என்ற மகனும், பத்மஜா என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஜாலியாக ஊர் சுற்றி மாணவர்கள், திடீரென கொலை செய்யும் அளவிற்கு மாறியுள்ளனர்.

நண்பனிடம் சவால் செய்து விட்டு பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்த 19 வயது வாலிபர்

ஒரு சிறிய விபத்தால் ஏற்பட்ட தகராறு, கொலையில் முடிந்த அதிர்ச்சிகர நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு வட்டாரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி