ஆப்நகரம்

கைதான 8 பேருக்கும் தூக்கு: தலித் பெண் வழக்கில் குரல் கொடுக்கும் பாமக..!

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை தூக்கிலிடக் கோரும் பாட்டாளி மக்கள் கட்சி

Samayam Tamil 27 Mar 2022, 12:49 pm
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் டேனியல் தலைமையில் மற்றும் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, அவர்கள் கூறுகையில், விருதுநகரில் 22 வயது இளம்பெண் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான 8 நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டு அதில் நான்கு பள்ளி மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Samayam Tamil virudhunagar rape case


மேலும், நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எட்டு நபர்களின் விசாரணையை 21 நாள்களில் முடித்து அவர்களுக்கு மிக கடுமையான தண்டனையான தூக்குத்தண்டனையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் வழக்கில் கைதான 8 பேரின் வீட்டில் நேற்று 7 மணி நேரமாக சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் அவர்கள் பயன்படுத்திய கைபேசி மற்றும் மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை தீவிரமாக பரிசோதனை நடத்தினர்.

இளம்பெண் பாலியல் வழக்கு: 7 மணி நேரமாக நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு..!

மேலும், அவர்களின் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் கணக்கை வைத்து வழக்கில் வேறு யாருக்குல்லாம் தொடர்பு உள்ளது மற்றும் வழக்கில் புதிய துப்பு கிடைக்குமா என்ற நோக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி