ஆப்நகரம்

அம்மிக் கல்லால் கொடூர கொலை; விபரீதத்தில் முடிந்த பாமக மகளிர் அணி தலைவி கள்ளக்காதல் விவகாரம்?

தவறான பழக்கத்தால் அரசியல் கட்சி பிரமுகர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 12 Jul 2019, 3:57 pm
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த சின்னகைனூரைச் சேர்ந்தவர் நிர்மலா. இவருக்கு வயது 42. இவர் அரக்கோணம் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவியாக இருந்துள்ளார்.
Samayam Tamil Girl Murder


கணவர் இறந்த நிலையில், தாய் உடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இரவு உறங்கச் சென்ற இருவரும், அடுத்த நாள் எழவில்லை. நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

சேலத்தில் முன்னாள் சிறை வார்டன் படுகொலை- நண்பர்கள் கைது!

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு நிர்மலா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அருகில் அம்மிக் கல் ரத்தக் கறையுடன் கிடந்தது. அவரது தாயாரும் படுகாயங்கள் உடன் மயங்கிக் கிடந்தார்.

டிக் டாக் விபரீதம்; ஜாலியா இருந்த இளைஞர் ஏரியில் மூழ்கி சாவு- தெலங்கானா அதிர்ச்சி!

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த தாயாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

பாலியல் பலாத்காரத்திற்கு பயந்து மாட்டுத்தொழுவத்தில் பெண் தஞ்சம்!!

இதுகுறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் நிர்மலாவிற்கு வேறொரு நபருடன் தவறான பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

அடுத்த செய்தி