ஆப்நகரம்

திருமணம் ரத்து... அன்றைய நாளே 17 வயது சிறுமி தற்கொலை... பெற்றோரிடம் எழும் சந்தேகம்

தருமபுரியில் 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Samayam Tamil 3 Dec 2021, 5:54 pm
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மகள், உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17. இவர் ப்ளஸ் டூ முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர்.
Samayam Tamil file pic


இதனை அறிந்த போச்சம்பள்ளி போலீசார் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, 18 வயதாகாமல் திருமணத்தை செய்து வைப்பது தவறு எனவும், குழந்தை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.

பின்னர் சிறுமியை பெற்றோர் சொந்த ஊரான அமானிமல்லாபுரத்திற்கு அழைத்து வந்தனர். அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பெற்றோரிடம் விசாரணை செய்த போது சிறுமி வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளனர்.

கழிவு நீர் மீன் சாப்பிட்டவர் பலி... வேலூரில் பரவும் மர்ம நோய்... பீதியில் கிராமம்

சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க முயன்ற அன்றே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளதால், சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்ததால் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி