ஆப்நகரம்

கல்வி வளாகத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி அலப்பறை.! வீடியோவால் சிக்கிய சேகர்கள்..

சென்னை அருகே பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்து அரிவாள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 2 Sep 2019, 12:53 pm
காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இங்கு இயங்கி வரும் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்வாணன் என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை கல்லூரி வளாகத்திற்குள் வெளி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார்.
Samayam Tamil 05


கோவையில் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இரு ரவுடிகள் கைது!

பல்கலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இவர்களது நண்பர்களது கையில் பட்டாக்கத்திகள் இருந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் அங்கிருந்த மற்ற மாணவர்களையும் மிரட்டியுள்ளனர். கத்தியை கொண்டு கேக் வெட்டி அதனை வீடியோ எடுத்து வலைத்தளத்திலும் பகிர்ந்துள்ளனர்.

ஏ.டி.எம் கார்டை திருடி, பணம் எடுத்து போலீஸ் வலையில் சிக்கிய இளம்பெண்..!

இந்த சம்பவத்தை அடுத்து பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்வாணன் உட்பட அவரது நண்பர்கள் ஆறு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மனைவியை கொன்று காணவில்லை என்று நாடகம் ஆடிய கணவன்.. இறுதியில் நேர்ந்தது என்ன?

தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்களது பிறந்தநாளை அவர்களது பாணியில் கொண்டாடவே கத்தி, அறுவா போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதை பார்க்கும் இளைஞர்களும் அதை முயற்சிப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

அடுத்த செய்தி