ஆப்நகரம்

திருட்டு வேட்டைக்கு தயாரான கும்பல் - இப்படிபோய் வசமா மாட்டிக் கிட்டாங்களே!

காரில் புறப்பட்டு சென்ற திருட்டு கும்பலை மதுரை போலீசார் கையும், களவுமாக பிடித்துச் சென்றனர்.

Samayam Tamil 25 Jun 2019, 6:33 pm
மதுரை மாவட்டம் பொன்மேனி அருகே உள்ள பைபாஸ் சாலையில், இன்று அதிகாலை கார் ஒன்றை தடுத்து நிறுத்த எஸ்.எஸ்.காலணி போலீசார் முயற்சித்தனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. உடனே போலீசார் அதை துரத்தினர்.
Samayam Tamil Police


ஒருவழியாக தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்தவர்களை வெளியே வருமாறு உத்தரவிட்டனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் கத்தி, மிளகாய் தூள், மரக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், திருட்டு கும்பல் என்பதை உணர்ந்தனர். காரில் இருந்தவர்கள் குறித்து விசாரித்த போது, அவர்கள் மகேந்திரன்(40), உதயகுமார்(30), பாண்டி(21), ஆனந்தராஜ்(21), அருண்குமார்(21), முத்துப்பாண்டி(21), அஜித்குமார்(21) என்று தெரிய வந்தது.

இவர்கள் அனைவரும் திருட்டில் ஈடுபட உரிய இடத்தை தேடி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி