ஆப்நகரம்

சேலத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு கிடைத்த தண்டனை...

சேலம் அருகே சிறுமியை கர்ப்பாக்கிய நபருக்கு நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ள சிறுமியின் உறவினர்கள்

Samayam Tamil 27 Sep 2020, 10:24 pm
சேலம் மாவட்டம் வாழைப்பாடியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). இவர் வழைப்பாடியில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்த 16 வயது சிறுமியை கண்டதும் காதலில் விழுந்துள்ளார். பின்னர் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
Samayam Tamil salem minor girl


இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிறுமியின் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு ஈரோட்டில் வசித்துவந்துள்ளனர்.

அதன் விளைவாக சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையில் மக்கள் காணவில்லை என்று சிறுமியின் வீட்டார் வழைப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்துள்ளனர். சிறுமி கர்ப்பமாகியுள்ள செய்தியை கேட்டறிந்த அவருடைய வீட்டார், உடனே ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

கந்து வட்டிக்கு கடன் வாங்கி வட்டிக்கு விட்ட பெண்ணை கொண்டு சென்ற மரணம்..!

அங்கு அருண்குமார் மற்றும் அவரது மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வந்தவர்கள், அருண்குமாரை ஒரு அறையில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர், மேலும், அவருக்கு மொட்டையடித்து அங்கிருந்து துரத்தியதாக கூறப்படுகிறது.

அதனை அறிந்த போலீசார் அருண்குமாரை மீட்டதோடு, அவர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அருண்குமாரை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக சிறுமியின் பெற்றோர் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி