ஆப்நகரம்

10 அழகிகள் மீட்பு.. ஸ்பாவில் விபச்சாரம்.. புதுச்சேரியில் பரபரப்பு..!

புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அழகுநிலையத்தில் விபச்சாரம் நடத்தியவரை போலீசார் கைது செய்து 10 அழகிகளை மீட்டனர்.

Samayam Tamil 11 Mar 2023, 4:19 pm
புதுச்சேரியில் அழகுநிலையங்கள், ஸ்பாக்களில் விபச்சாரம் நடப்பதாக தொடர்ச்சியாக போலீசாருக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. அவ்வப்போது போலீசாரும் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் புஸ்சி வீதியில் உள்ள ஒரு அழகுநிலையத்தில் விபசாரம் நடப்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Samayam Tamil puducherry crime


உடனே காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமையில் போலீசார் அந்த அழகுநிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. மேலும் செல்போனில் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு இங்கிருந்து அழகிகள் அனுப்பி வைப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட புதுச்சேரி, மும்பை, நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களை சேர்ந்த 10 அழகிகளை போலீசார் மீட்டு, காப்பகத்தில் தங்கவைத்தனர். அழகுநிலையத்தை நடத்தி வந்த கோவிந்தசாலையை சேர்ந்த புருஷோத்குமார் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பலமான கணவன் ரகசியம்... 2 வாரத்தில் புதுப்பெண் தற்கொலை..! கரூரில் பகீர் சம்பவம்

ஸ்பா உள்ளிட்ட அழகு நிலையங்களில் ரகசியமாக விபச்சாரம் நடந்து வருவது பெருகியுள்ளது. இதற்கு சில காவல் அதிகாரிகளே கமிஷன் வாங்கிக்கொண்டு கண்டுக்காமல் இருப்பதாலும், அதுபோன்ற ஸ்பா சென்டர்களில் டிபார்ட்மெண்டில் இருப்பவர்களே கஸ்டமர்களாக இருப்பதாலும் விபச்சார தொழில் கொடிகட்டி பறப்பதாக சொல்கிறார்கள்.

குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வேலை தேடி வரும் பெண்களை ஆசை வார்த்தைக்கூறி பணத்தை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சிட்டி பகுதிகளில் செயல்படும் ஸ்பா சென்டர்களில் பாதி இடங்களில் பாலியல் சர்வீஸ்கள் செய்யப்படுவதாக விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். சில நேரங்களில் மட்டும் அதிக கெடுபிடி காட்டி காவல்துறை நடவடிக்கை எடுப்பதாகவும் மற்ற நேரங்களில் தெரிந்தே விட்டுவிடுவதாகவும் பணியில் உள்ள காவலரே நம்மிடம் கூறினார்.

அடுத்த செய்தி