ஆப்நகரம்

சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று போலீஸ் செய்த வேலை..! காரைக்குடியில் அவலம்

சிவகங்கை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது

Samayam Tamil 17 Jan 2021, 10:00 pm
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் மதுரை ஐஜி அலுவலகத்தில் அலுவலக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பாலாஜி தான் வசிக்கும் பகுதியில் உள்ள 7 வயதான சிறுமியை தினமும் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
Samayam Tamil file pic


ஒவ்வொரு முறையும் சிறுமியை மிரட்டி வந்ததால் நடத்தவற்றைக்குறித்து சிறுமி வீட்டிலும் சொல்லவில்லை. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று பாலாஜி சிறுமியை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, மகளை பாலாஜி அழைத்து சென்ற தகவலை அறிந்த சிறுமியின் தாயார், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலாஜியின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார்.

சுவற்றில் இருந்து எலும்புக்கூடாக வந்த பெண்ணின் சடலம்..! காதலன் கைது

அப்போது, பாலாஜியின் பிடியில் இருந்து மகளை மீட்டு வெளியே வந்த பெண், பாலாஜியை உள்ளேயே வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டியுள்ளார். தொடர்ந்து பாலாஜியை குறித்து காரைக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாலாஜியை கைது செய்து ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி