ஆப்நகரம்

கன்னியாகுமரியில் களைகட்டிய கஞ்சா பிசினஸ்!

நாகர்கோவிலை அடுத்த வடசேரி பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையில் ஈடுபட்டு வந்த எட்டு பேரை தனிப்படை போலிசார் கைது செய்தனர்.

Samayam Tamil 29 Sep 2020, 11:23 am
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா, போதை ஊசி மருந்துகள் விற்பனைக்கு பயன்படுத்திய சொகுசு கார், இரு சக்கர வாகணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil nagarcoil


கொரோனா காலத்தில் கடந்த மாதங்களில் பொதுமக்கள் ஊர் விட்டு ஊர் செல்ல இ பாஸ் முறை அமலில் இருந்தது. இ பாஸ் இல்லாமல் ஒரு நபர் கூட மாவட்டம் விட்டு மாவட்டம் பயணம் செய்யமுடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் கஞ்சா கடத்தல் மட்டும் கொரோன காலத்தில் இ பாஸ் எதுவுமின்றி வெளி ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவடத்திற்கு எந்த வித தடையும் இன்றி சர்வ சாதாணமாக கொண்டுவரபட்டு விற்பனையும் களை கட்டியது.

பொது மக்கள் மத்தியில் குற்றசாட்டுகள் அதிகரித்தை தொடர்ந்து கடந்த இரண்டரை மாதங்களில் 40க்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட போலீஸ் எஸ்பி உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

வியாசர்பாடி பயங்கரம்: ஆட்டோ ஓட்டுநர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை

இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளை விற்பனை செய்த கும்பலை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திக் ராஜா, கண்ணன்,சேகர் ஆகிய 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே ஆயுதப்படை காவலர் ஓட ஓட வெட்டிக்கொலை..!

மேலும் அவர்களிடம் இருந்த செல்போன்கள் நம்பர்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா, போதை ஊசி மருந்துகள் விற்பனைக்கு பயன்படுத்திய சொகுசு கார், இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி