ஆப்நகரம்

பள்ளிச் சிறுமியிடம் இப்படியா பண்றது? திருநங்கைகளை கைது செய்த சென்னை போலீஸ்!

இரு திருநங்கைகளை சென்னை அண்ணா நகர் போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Samayam Tamil 30 Jul 2019, 9:11 am
சென்னையில் கடந்த ஜூலை 26(வெள்ளிக்கிழமை) அன்று, பள்ளிச் சிறுமி ஒருவர் தனியார் டியூசன் சென்டருக்கு சென்றுள்ளார். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, சாந்தி காலணி 5வது தெரு அருகே இரு திருநங்கைகள் வழிமறித்துள்ளனர்.
Samayam Tamil Arrest


அச்சிறுமியிடம் இருந்து மொபைல் போனை கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் பயந்து போன சிறுமி, உடனே தனது போனை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

திருப்போரூர் அருகே மூன்று பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு- முன்விரோதம் காரணமா?

இவர் அதே பகுதியில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தறிகெட்டு ஓடிய கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து விபத்து: ஒருவர் பலி!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரு திருநங்கைகள் செல்போனை பறித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் மூன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிய கும்பல் சேலத்தில் கைது!

உடனே அவர்களைப் பிடிக்க சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில் இரு திருநங்கைகளும் கைது செய்யப்பட்டனர்.

அடுத்த செய்தி