ஆப்நகரம்

ரூ.12 லட்சம் கொடுத்தா அரசு வேலை ரெடி; சென்னையில் மெகா மோசடி அம்பலம்!

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 2:08 pm
சென்னை நீலாங்கரையை அடுத்த அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் டி.ஜமுனா தேவி. இவர் தமிழ்நாடு அரசில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் கூறியுள்ளார். தனக்கு பல்வேறு அரசு துறைகளில் தொடர்புகள் இருக்கின்றன. எனவே பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தர தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இது காட்டுத்தீ போல பரவியது. இதனை நம்பி பலரும் பணம் கொடுத்துள்ளனர். குறிப்பாக எஸ்.சரவணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஜமுனா தேவி உறுதியளித்தார்.
Samayam Tamil Job Cheating Fraud


அதனை நம்பி ரூ.12 லட்சம் கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தரும் நடவடிக்கையில் அவர் ஈடுபடவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரைத் தொடர்பு கொண்டு கேட்கையில் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போலீசில் புகார் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜமுனா தேவி எங்கிருக்கிறார் என்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

லாட்ஜில் பாலியல் தொழில்: அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை மீட்ட போலீஸ்!

அப்போது அவர் ஒளிந்திருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே விரைந்து சென்று ஜமுனா தேவியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் மேஜிஸ்டிரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக ஜமுனா தேவி பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜமுனா தேவிக்கு வேறு மாவட்டங்களிலும் கூட்டாளிகள் இருப்பதாக சந்தேகப்படுகிறோம். அவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்திருக்கக்கூடும். தற்போது பாதிக்கப்பட்ட சிலர் மட்டுமே புகார் அளிக்க முன்வந்துள்ளனர். விரைவில் பலரும் துணிந்து வருவர் என்று எதிர்பார்க்கிறோம்.

முகம் தெரியாத முகநூல் காதல், கை குழந்தையுடன் தவிக்கும் ஏழை பெண்...

பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இதுபோன்ற ஏஜெண்ட்களை நம்பி அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி