ஆப்நகரம்

7 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை - சிக்கிய 65 வயது முதியவர்!

சிறுமிக்கு தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வந்த விவகாரத்தில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 5 Jul 2020, 2:33 pm
கோவை தாமு நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பீளமேடு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர் அருகிலுள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். தம்பதியினர் வியாபாரத்திற்கு செல்லும் போது தங்கள் மகளை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுச் செல்வர். அந்த வீட்டில் 65 வயது முதியவர் வரதராஜன், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
Samayam Tamil Kovai Rape Case.


மனைவி, மகன் ஆகியோர் தினமும் வேலைக்குச் சென்று விடுவதாக முதியவர் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்த எம்பிஏ மாணவர் கைது..! கோவையில் போதை மருந்து சப்ளை...

இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். அடுத்த நாளும் சிறுமியை முதியவர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து ஒருவார காலமாக சிறுமிக்கு வலியும், வேதனையும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வெள்ளி அன்று முதியவர் வீட்டிற்கு செல்ல அச்சிறுமி மறுத்துள்ளார். அப்போது விசாரிக்கையில் முதியவர் செய்த கொடுமைகள் அனைத்தும் தெரியவந்தன.

இதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் முதியவரைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் மாமியார் கொடுமையால் மருமகன் தூக்கிலிட்டு தற்கொலை..!

அடுத்த செய்தி