ஆப்நகரம்

தவறை தட்டிக்கேட்ட போலீசுக்கு 17 தையல்..! குடிபோதை வாலிபரின் அராஜகம்...

வேலூர் அருகே காவலரை மடக்கி பிளேடினால் கீறிவிட்டு தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 2 Oct 2020, 8:54 pm
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவலர் அருள் கண்மணி அந்த வாலிபரை கண்டித்துள்ளார்.
Samayam Tamil video grap image


அதையடுத்து காவலர் அருள் கண்மணி அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட முயன்றபோது அந்த வாலிபர் தான் கையில் வைத்திருந்த பிளேடை கொண்டு காவலர் அருளை நெற்றி, முகம், கழுத்து என பல இடங்களில் தொடர்ச்சியாக கீறினார்.

இதனால் பதற்றம் அடைந்த காவலர் வண்டியை விட்டு கீழே இரங்கி, குடிபோதை வாலிபரை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து வாலிபரை கீறி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலையில் காவலருக்கு ரத்தம் அதிகமாக கொட்டிய நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

16 வயது சிறுவனை காதலித்த 11 வயது சிறுமி தற்கொலை..! சிவகங்கை பரபரப்பு

அங்கு அவருக்கு 17 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவலரை பிளேடினால் கீறிய வாலிபர் பெயர் நவீன் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொது இடத்தில் காவல் நிலையம் முன்பே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி