ஆப்நகரம்

விவாகரத்தான பெண்ணை மிரட்டி மிரட்டி சீரழித்த போலீஸ், 8 வயது சிறுமிக்கும் நேர்ந்த கதி

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து வந்த போலீஸ் கான்ஸ்டேபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 3 Oct 2020, 4:11 pm
உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் முதுகெலும்பை உடைத்தும், நாக்கை துண்டித்தும் சித்திரவதை செய்யப்பட்டார் என தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தெளிவில்லாத தகவல்கள் பெரும்பாலானவர்களிடம் இருந்து வருகின்றது.
Samayam Tamil woman rape


ஆனால், மருத்துவர்களும், போலீசாரும் அதை மறுத்து வருகின்றனர். இந்த கோர சம்பவத்துக்கு பிறகு பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 33 வயதான பெண் திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கும் விக்ரமசிங் (30) என்பவருக்கும் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருநாள் தன்னுடைய நண்பர் வீட்டுக்கு வருமாறு விக்ரமசிங் அந்த பெண்ணை அழைத்துள்ளளார். அங்கு அவருக்கு கொடுத்த உணவில் மயக்க மருந்துகளை கலந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் மயங்கியுள்ளார். அப்போது அந்த அவரை பலாத்காரம் செய்து தனது இச்சையை தீர்த்துளார்.

மேலும், எதிர்காலத்தில் அந்த பெண்ணிடம் நினைக்கும் போதெல்லாம் உறவு வைத்துக்கொள்ள ஆசை பட்ட விக்ரமசிங், அந்த பெண்ணை நிர்வாணமாகா வீடியோ எடுத்து வைத்துக்கொண்டார். அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக வன்புணர்வு செய்து வந்துள்ளார். இதற்கிடையில் விக்ரமசிங்கிற்கு கான்பூரில் போலீஸ் கான்ஸ்டேபிள் வேலை கிடைத்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணுடன் திருமணமும் நடந்துள்ளது.

குமரி கடலில் மாயமான சிறுவனின் உடல் மீனவர்கள் வலையில் சிக்கியது!

இருப்பினும், அந்த பெண்ணை மிரட்டி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், இத்தனை நாட்களாக பொறுத்து வந்த அந்த பெண் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விக்ரமசிங்கை கைது செய்துள்ளனர். இதேபோல, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 25 வயதான விஸ்வகர்மா என்ற நபர் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்திருந்தது. பலாத்கார சம்பவத்துக்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் கூட அக்கிரமங்கள் தொடர் கதையாகி வருவது பெண்களுக்கிடையே பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.

அடுத்த செய்தி