ஆப்நகரம்

ஊரடங்கு உத்தரவை மீறிய சென்னை வாசி மீது வழக்கு..! கோடம்பாக்கத்தில் முதல் சம்பவம்

சென்னை கோடம்பாக்கத்தில் வீட்டின் கண்காணிப்பில் இருந்து வெளியே சென்ற நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 24 Mar 2020, 9:56 pm
சென்னை: கோடம்பாக்கம் அருகே கண்காணிப்பையும் மீறி வெளியே சுற்றிய நபர் மீது சுகாதார அதிகாரி சுகன்யா தேவி போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் அவரை நோய் தொற்று பரப்புதல் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil ஊரடங்கு உத்தரவை மீறிய சென்னை வாசி மீது வழக்கு


தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து சொல் பேச்சு கேட்காத விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் வழக்காக இது கருதப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி இன்று கொரோனா குறித்த உரையில் தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கை உங்களை, உங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது என்று கூறிய அவர் கொரோனாவை தடுக்க சமூக விலகல் சிறந்த தீர்வு என கூறினார்.

கோவை அருகே தீ விபத்து..! பல லட்சம் மதிப்பிலான பைப்புகள் எரிந்து நாசம்...

அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இருப்பினும் சில இடங்களில் கொரோனாவின் தீவிரத்தை அறியாமல் பொது இடங்களில் கூடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி