ஆப்நகரம்

Breaking: திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு; பொதுமக்கள் பீதி..!

திருச்சி அருகே ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2023, 2:35 pm
திருச்சி குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் இரண்டு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் துரை, சோமு ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ரவுடிகள் சேர்ந்து காவலரை அரிவாளால் வெட்டியதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil trichy


அண்மையில் கோவை நீதிமன்ற அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான இரண்டு ரவுடிகளை போலீசார் சுட்டு கைது செய்தனர். இந்த நிலையில், தமிழத்தில் அடுத்தடுத்து காவல்துறையினர் நடத்தி வரும் துப்பாக்கி சூடு நடவடிக்கைகள் ரவுடிகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்துள்ளது.

தற்போது, திருச்சியில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கி சூட்டில் காயப்பட்டவர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகவில்லை. முழு விவரம் விரைவில் பதிவிடப்படும்.

அடுத்த செய்தி