ஆப்நகரம்

கோவையில் சிறுமி கடத்தல்! 5 மாதங்கள் கழித்து வந்த தகவல்... பெற்றோர் கண்ணீர்

கோவையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போஸ்கோ சட்டத்தில் கைது செய்தனர்.

Samayam Tamil 12 Aug 2020, 8:03 pm
கோவை ஆர்எஸ் புரம் அருகே உள்ள சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜன். இவர் ஓரு கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர்ராஜன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தார்.
Samayam Tamil accused


இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆர்எஸ் புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலிஸார் இருவரையும் தொடர்ந்து தேடிவந்தனர். இதனை தொடர்ந்து தனிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் சென்ற போலிஸ் சுந்தர்ராஜனை கைது செய்தனர்.

கைலாசா கரன்சி, வரும் 22ஆம் தேதி அறிமுகம்- நித்தி அறிவிப்பு?

இந்த நிலையில் போலிஸார் சிறுமியை மீட்டனர். இதனை தொடர்ந்து போலிஸார் சுந்தரராஜன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஊரடங்கில் இதுபோன்று சிறுமிகள் கடத்தப்பட்டு திருமணம் செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

அடுத்த செய்தி