ஆப்நகரம்

வேண்டாம் விட்டுவிடு எனக் கதறிய தந்தை.. ஈவு இரக்கமின்றி கொலை செய்த மகன்.. காரணம் என்ன?

தேனி அருகே சொத்து பிரச்சனைக்காகத் தந்தையைக் கொலை செய்த மகனை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Samayam Tamil 14 Sep 2019, 1:11 pm
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையான்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன்(55). இவருக்கு முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில் விவகாரத்து பெற்று 2 திருமணம் செய்து கொண்டார். 2 மனைவிக்கு முத்துப்பாண்டி (25), பூபாண்டி என்ற மகன்களும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர்.
Samayam Tamil 11


குபேந்திரன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை வீட்டை விட்டு வெளியேறி வைகை அணை அருகே ஆற்றின் கரையோரம் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அங்கு குள்ள புரத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குபேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சையில் ஓரு கால் அகற்றப்பட்டு வீட்டில் படுத்த நிலையிலிருந்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவர் தங்கியிருந்த வைகை அணை வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

உடலைக் கைப்பற்றிய வைகை அணை போலீஸார் இதுகுறித்து வழிக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். போலீஸாரின் விசாரணையில் சொத்திற்காகத் தந்தையை மகனே கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து உசிலம்பட்டி அருகே வாகைகுளம் பகுதியில் ஒளிந்திருந்த குபேந்திரனின் மூத்த மகன் முகத்துப்பாண்டியை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முகத்துப்பாண்டி தெரிவித்தாவது, தனது தந்தை குபேந்திரனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததால் எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. அவரை பலமுறை வீட்டிற்கு வருமாறு அழைத்தும் வரவில்லை. இதனால் அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் பறிபோகி விடுமோ என்ற பயத்தில் கொலை செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வைகை அணையில் நடைபெற்ற கொலையில் 24 மணி நேரத்தில் குற்றவாளியைக் கண்டுபடித்து கைது செய்த போலீஸாரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார். கைது செய்யப்பட்ட முகத்துப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி