ஆப்நகரம்

மயிலையில் திருநங்கையை கிண்டலடித்தவர் குத்தி படுகொலை..!

மயிலை அருகே திருநங்கையை கிண்டல் செய்த நபரை கொலை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Apr 2021, 4:15 pm
மயிலாடுதுறை மாவட்டம் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர் குடிபோதையில் அப்பகுதியில் இருக்கும் திருநங்கைகளை கிண்டல் செய்துள்ளார்.
Samayam Tamil iyappan


இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் அப்பகுதியில் தங்களுக்கு தெரிந்த வாலிபர்களிடம் கூறியுள்ளனர். அதனையடுத்து, ஐயப்பனை கண்டிக்க சென்ற கும்பல் ஐயப்பனை அடித்து தாக்கியதுமட்டுமில்லாமல் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளது.

கட்டி வெச்சு, நிர்வாணமாக்கி அறுப்பேன் - வேட்பாளர் ஆத்திரம்

அதனையடுத்து ஐயப்பனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தப்பி சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல, இளைஞர்களிடம் புகார் கொடுத்த திருநங்கைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி