ஆப்நகரம்

பட்டப்பகலில் அராஜகம்... அம்மா உணவகம் சூறையாடல்... 3 பேர் மீது வழக்கு..!

மதுரவாயலில் அம்மா உணவக பெயர் பலகை அகற்றப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 4 May 2021, 3:48 pm
சென்னை மதுரவாயலில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை திமுக தொண்டர்கள் சிலர் அடித்து உடைத்தும், பேனரை கிழித்தும் சேதப்படுத்தினர். மேலும், உணவகத்துக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்து வீசிவிட்டு சென்றனர்.
Samayam Tamil video picture


இதனால், உள்ளே இருந்த பெண் ஊழியர்கள் அலறியபடி வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி, திமுகவினரின் அராஜகம் என்று குறிப்பிடப்பட்டு வைரலானது. இதனால், பொதுமக்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ம. சுப்ரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில், '' மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் கழகத்தலைவர் உடனடியாக உத்தரவிட்டார்'' என்று தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின் ஜெயிக்கணும், நாக்கை அறுத்து காணிக்கை..! தீவிர சிகிச்சையில் பெண்..!

இந்நிலையில், அம்மா உணவகம் பெயர் பலகை அகற்றப்பட்ட விவகாரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நவசுந்தர், சுரேந்திரன் உள்ளிட்ட மூவர் மீது 3 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக சேதப்படுத்தபட்ட அம்மா உணவகத்தில் பெயர் பலகை மீண்டும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி