ஆப்நகரம்

இது வெடிக்குமா? இல்லை பரவுமா? மணலி தீவில் அதிர்ச்சியூட்டிய மர்ம பொருள்!

மன்னார் வளைகுடா தீவுகளில் ஒன்றான மணலி தீவில் மர்ம பொருள் ஒன்றை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Samayam Tamil 8 Dec 2019, 2:07 pm
ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா தீவுகளில் ஒன்று மணலி. இங்கிருந்து இலங்கைக்கு கடத்த வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil Manali Island


இதையடுத்து தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் ஜேசுதாஸ், திவாகர், செந்தில்குமார், குகணேஸ்வரன் அடங்கிய குழு மணலி தீவிற்கு விரைந்தனர். இவர்கள் நடத்திய சோதனையில் பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதுபற்றி அளிக்கப்பட்ட தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் புறப்பட்டனர். இவர்கள் சுந்தரமுடையானில் இருந்து படகு மூலம் மணலி தீவிற்கு சென்றடைந்தனர்.

ஏடிஎம் திருடனாக மாறிய இளைஞர்!

சம்பவ இடத்தில் மர்ம பெட்டியை ஆய்வு செய்தனர். அந்த தீவில் வேறு யாரேனும் பதுங்கி இருக்கின்றனரா என்று சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அப்படி யாரும் இல்லை.

போலீசார் கைப்பற்றிய பெட்டி ஒரு அடி உயரம், அரை அடி அகலம் கொண்டது. அலுமினிய பெட்டியாக மஞ்சள் நிறத்தில் இருந்துள்ளது. ஒருவேளை வெடிபொருளாக இருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்தது.

இளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..! உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ!

இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெடிமருந்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் விசாரணைக்கு பின்னரே பெட்டியில் என்ன இருக்கிறது?

அது யார் வைத்து சென்றது? உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். மணலி தீவில் இருந்த மர்ம பெட்டி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மற்றுமொரு அதிர்ச்சி.! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இளம்பெண் எரித்து கொலை.!?

அடுத்த செய்தி