ஆப்நகரம்

திருவாரூரில் பயங்கரம்; தூக்கில் தொங்கிய வாலிபர் கொலையான பின்னணி?

வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு உரிய வகையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2019, 5:11 pm
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி பவுண்டடி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ரூபராஜ்(28). இவர் எடையூர் நெல் குடோனில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
Samayam Tamil police investigating the mysterious suicide of youth in tiruvarur
திருவாரூரில் பயங்கரம்; தூக்கில் தொங்கிய வாலிபர் கொலையான பின்னணி?


இந்நிலையில் இன்று காலை ரூபராஜ், சங்கேந்தி மேட்டுக்கோட்டகம் சாலையில் மின்னடி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் கிளையில் மர்மமான நிலையில் தூக்கில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்து, எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை ராஜேஷ், எடையூர் சிவதாஸ் ஆகியோர் ரூபராஜ் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

தூக்கில் தொங்கிய வாலிபர் ரூபராஜின் கைகள் பின்னால் சேர்த்து மர செட்டியின் கொடியில் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் ரூபராஜின் உறவினர்கள், கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை அமைதிபடுத்தி, ரூபராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ரூபராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? கைகள் கட்டப்பட்டு இருப்பது ஏன் ? இறந்ததற்கான காரணம் என்னா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி