ஆப்நகரம்

மதுரையில் பரபரப்பு; கள்ளத்துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல் - இளைஞரிடம் விசாரணை!

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞரைப் பிடித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 28 Feb 2019, 6:57 pm
மதுரை மேல அனுப்பனடி பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். ஒரு குற்ற வழக்கில் இவரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது அவரது வீட்டில் சோதனையிடுகையில், ஒரு துப்பாக்கி மற்றும் 16 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
Samayam Tamil Gun


கல்யாணசுந்தரம் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி வழக்குகள் இருக்கின்றன. சமீபத்தில் மதுரை செல்லூர் அருகே நகை அடகு கடையில், 1400க்கும் மேற்பட்ட நகைகள் கொள்ளை போனது. இதனைக் கண்டுபிடிக்க 4 தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.

இந்த சூழலில் தான் அவனியாபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்யாணசுந்தரம் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் நகை அடகு கடை கொள்ளையில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்து வருகின்றனர். ஆனால் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தான் கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் துப்பாக்கி வாங்க உதவியாக இருந்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி