ஆப்நகரம்

தூத்துக்குடியில் வெடிகுண்டு வீசி காவலர் சம்பவ இடத்திலேயே பலி..! ஒருவர் கைது

தூத்துக்குடி ரவுடியை பிடிக்க சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் உயிரிழப்பு

Samayam Tamil 18 Aug 2020, 3:48 pm
தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அது தொடர்பாக இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி துறை முத்துவை போலீசார் பிடிக்க சென்றுள்ளனர். வல்லநாடு மணக்கரை அருகே போலீசார் சென்றபோது ரவுடி வீசிய நாட்டு வெடிகுண்டு வெடித்து காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Samayam Tamil bomb spot



சம்பவ இடத்தில் மாவட்ட காவல் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசிய துறை முத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், மணல் கொள்ளையில் ஈடுபட்டு தப்பியவர்களை தேடி வருகின்றனர்.


ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டமே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அந்த உத்தரவை வரவேற்றுள்ளது. இந்நிலையில், மணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீசார் மீது நாடு வெடிகுண்டு வீசி கொன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி