ஆப்நகரம்

Trichy Lalitha Jewellery: கொள்ளையர்கள் சிக்கவில்லை, நாங்கள் மடக்கி பிடித்தோம்!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மணிகண்டன் வாகன சோதனையில் சிக்கவில்லை, நாங்கள் மடக்கிச் சென்று பிடித்தோம் என்று போலீஸார்கள் கூறும் விதமாக தற்போது சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 5 Oct 2019, 2:12 pm
திருச்சி லலிதா நகைக்கடை கொள்ளையர், திருவாரூரில் நடந்த வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் சென்றதால் பிடிபட்டனர் என்ற தகவல் தமிழகம் முழுவதும் பரவியது. திருச்சி மாநகர காவல்துறை அமைத்த, 7 தனிப்படைகளிடம் சிக்காத கொள்ளையர், திருவாரூரில் வாகன தணிக்கையில் சிக்கியுள்ளார்கள் என்று பரவலான பேச்சு எழுந்தது.
Samayam Tamil Untitled collage (7)


ஆனால், 'கொள்ளையரை நாங்கள் குறிவைத்து தான் பிடித்தோம்' என்பதை நிரூபணம் செய்யும் வகையில், திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாறாக இரு சக்கரவாகனத்தில் மணிகண்டன் தலையில் ஹெல்மட் அணிந்திருந்தார். ஆம்னி கார் பின்பு மறைந்தபடியே சென்ற அவர்களது வாகனத்தை போலீஸார் கவனித்தனர். இதனால் சந்தேகம் காரணமாக உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையிலான தனிப்படையினர் இருவரையும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மடக்கிச் சென்று பிடித்தனர். இந்த சம்பவத்தை தற்போது போலீஸார் வெளியிட்ட சிசிடிவி காட்சி மூலம் பார்க்கலாம்.
சுரேஷ் தப்பியோடிவிட, நகைப்பையுடன் மணிகண்டன் சிக்கியுள்ளார். இதன்மூலம், மிகப்பெரிய கொள்ளை வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டு கிடைத்துள்ளது. விரைவில், கொள்ளைக் கும்பலின் தலைவன் திருவாரூர் முருகன், அவரது மைத்துனர் சுரேஷும் நாளைக்குள் சிக்குவர் என தெரிகிறது.

சுரேஷ் தாய் கனகவல்லி, ரவி, மாரியப்பன், குணா ஆகியோரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய சுரேஷ் அவரது மனைவியுடன் தலைமறைவாகியுள்ளார். கொள்ளைக் கும்பலை குறிவைத்து பிடித்த, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜு, தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் தலைமையிலான தனிப்படைக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி