ஆப்நகரம்

கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு கொள்ளை சம்பவம், டென்ஷனில் போலீஸ்...

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Samayam Tamil 7 Feb 2021, 9:25 pm
அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் இயங்கி வந்த முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 7 கோடி 40 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை 18 மணி நேரத்திற்குள் ஐதராபாத்தில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil file pic


அதனை தொடர்ந்து சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் புகுந்து தாய், மகனை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற வட மாநிலத்தவர்களின் சம்பவம் பூதாகரமாக வெடித்தது. இச்சம்பவத்தில் ஒரு குற்றவாளி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டான். இப்படி வட மாநிலத்தவர்கள் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கிருஷ்ணகிரியில் மேலும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாகலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஒய்வு பெற்ற ராணுவ வீரர் அகில்குமார். இவரது மனைவி பிரீத்தி. இன்று அதிகாலை இவர்களது வீட்டின் ஜன்னல் வழியாக குதித்த மூன்று மர்ம நபர்கள் தம்பதியை அடித்து நாற்காலியில் கட்டிபோட்டுள்ளனர். பின்னர் வீட்டின் பீரோவில் இருந்து 24 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பச்சை மாவட்டமான அரியலூர்..! இன்றைய மாவட்ட வாரியாக நிலவரம்..!

இதையடுத்து, தம்பதியின் முனுங்கல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தனர். அப்போது, வாயில் துணியுடன் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்த தம்பதியை விடுவித்தவர்கள், உடனே அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட தம்பதி பாகலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கொள்ளையடித்துவிட்டு தப்பிய மூன்று பேரை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் மூவரும் முகமுடி அணிந்திருந்ததால், வந்தவர்கள் வட மாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

அடுத்த செய்தி