ஆப்நகரம்

coonoor: சூலூர் வந்த போலீசாரின் பாதுகாப்பு வாகனம் விபத்து..!

குன்னூரில் இருந்து சூலூர் வந்த தமிழக போலீசாரின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 9 Dec 2021, 2:19 pm
குன்னுர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ராணுவ அதிகாரிகள் 13 பேருடைய உடல்கள் குன்னுர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து சூலூர் விமான படை தளத்திற்கு பிற்பகல் 1 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டன.
Samayam Tamil sulur accident


ராணுவ வீரர்களின் உடல்கள் தமிழக அரசின் அமரர் ஊர்தியில் தனித்தனியாக குன்னூரில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பாதுகாப்புக்காக அணி வகுத்து சென்ற தமிழக அதிவிரைவுப்படை வாகனம் மலை சாலை பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காவலர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சம்பவத்தில் உள்ள சிலர் கூறியுள்ளனர்.

செல்ல மகளின் நாயை மாடியில் இருந்து வீசி கொன்ற நபர்: தந்தை கொடுத்த பதிலடி

முன்னதாக, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மக்களவையில் இரங்கல் தெரிவித்ததையடுத்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்படும் என்றும் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி