ஆப்நகரம்

பலலட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி..! திருப்பதியில் தில்லு முல்லு

சேஷாச்சலம் வனப்பகுதியில் இருந்து செம்மரம் வெட்டி கடத்த முயன்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 13 Mar 2020, 10:15 pm
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்த முயன்ற செம்மரக்கட்டைகளை கைப்பற்றி பறிமுதல் செய்த செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், செம்மரம் கடத்த முயன்ற திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சேர்ந்த 2 பேரை இன்று கைது செய்தனர்.
Samayam Tamil திருப்பதியில் பலலட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி


திருப்பதி மலை அடிவாரத்தில் இருக்கும் சேசாசலம் வனப்பகுதியில் சிலர் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நிழலுக்கு ஒதுங்கிய தொழிலாளர்கள்..! சாடாரென இடிந்த சுவர்... 2 பேர் பலி

தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், கடத்தல்காரர்களை பிடிப்பதற்காக காத்திருந்தனர். அப்போது சிலர் செம்மரங்களை வெட்டி தூக்கி வருவதை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது
போலீசார் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை பின்தொடர்ந்த போலீசார் இருவரை மடக்கி பிடித்தனர். விசாரித்ததில், இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த வெங்கடேஷ் (35), ஸ்ரீநிவாஸ் (25) என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கடத்த முயன்ற 12 செம்மரக்கட்டைகளை கைப்பற்றி தப்பியோடிய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி