ஆப்நகரம்

ஆண் நண்பர்களுக்கு உல்லாச விருந்து... மாடல் அழகி சுவாதி கூலாக கூறிய தகவல்கள்

சென்னையில் 550 சவரன் நகைகள் திருட்டு வழக்கில் பைனான்ஸ் நிறுவனருடன் சிக்கிய மாடல் அழகியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 13 Aug 2022, 5:31 pm
சென்னை, பூந்தமல்லி, முத்து நகரை சேர்ந்தவர் சேகர் (40). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவரது தம்பி ராஜேஷ் (37). i இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இருவரும் குடும்பத்துடன் தாய் தமிழ்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், சேகரின் மனைவி அவருடன் சண்டையிட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்... மனைவியை பிரிந்த சேகருக்கு பைனான்ஸ் தொழில் ரீதியாக வேளச்சேரியை சேர்ந்த சுவாதி (22) என்ற மாடல் அழகியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil model swathi case


காலப்போக்கில் இருவரும் நெருக்கமாக பழகி நட்சத்திர ஹோட்டல்களில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சுவாதியின் அழகில் மயங்கிய சேகர் வீட்டில் இருந்த 550 சவரன் நகைகளை சிறிது சிறிதாக சுவாதிக்கு கொடுத்து சந்தோசப்படுத்தியுள்ளார். மேலும், கேட்கும்போதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளார். அதுபோக, கார் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் நகைகள் மாயமாகி இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் சேகர் மீதும் சுவாதி மீதும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சேகரையும், சுவாதியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து, விசாரணை அதிகாரி கூறியதாக சில அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சேகரை சுவாதி சந்திப்பதற்கு முன்பே சுவாதிக்கு பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்துள்ளது. சேகர் கொடுத்த நகைகளை இஷ்டம்போல ஆண் நண்பர்களுடன் ரூம் போட்டுஅதை செலவழித்து வந்துள்ளாராம்.... சுவாதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது என்பதில் சேகர் பிடியாக இருந்துள்ளார். ஒருநாள் சேகரும் சுவாதியும் கோவாவுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

போலீஸ் இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்? பிடிஆர் கார் மீது ஆவேசமாக பாய்ந்த பாஜக கும்பல்

அதே ஹோட்டலில் சுவாதியின் ஆண் நண்பர்கள் வந்துள்ளனர். சுவாதிதான் தகவல் கொடுத்துள்ளார். இது சேகருக்கு பிடிக்கவில்லை. தங்க முட்டை போடும் வாத்தை பகைத்துக்கொள்ள கூடாது என்று சேகரை சுவாதி அப்போது சமாதானம் படுத்தியுள்ளார். ஆனாலும், சுவாதி ஆண் நண்பர்களுடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை... சேகர் சுவாதியிடம் பழகும் விவகாரம் சேகர் வீட்டாருக்கு ஏற்கனவே தெரிந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். நகை காணாமல் போன பிறகுதான் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும், சேகரின் குடும்பம் ஏற்கனவே சுவாதியை கடத்தி கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டதாகவும் சுவாதி போலீசில் தெரிவித்துள்ளார். தற்போது சேகர் வீட்டார் மீதும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருடிய நகைகள் குறித்து சுவாதியிடம் போலீசார் கேட்டதற்கு, அதை நான் எனது ஆண் நண்பர்களுடன் நட்சத்திர ஹோட்டல்களில் செலவழித்துவிட்டதாக கூலாக பதில் அளித்துள்ளார். மொத்தம் 500 சவரன் நகை, 7 தங்க கட்டிகள். அவைகளை மீட்கும் பணிகளில்தான் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி