ஆப்நகரம்

ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி: திருச்சி அருகே எஸ்ஐ தலையை உடைத்த விழா குழுவினர்

திருச்சி அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதால் எஸ்ஐ மீது கல்லால் தாக்குதல்

Samayam Tamil 17 Jan 2022, 3:30 pm
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் அனுமதியின்றி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக கல்லக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அதன் பேரில் எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் கீழரசூர் கிராமத்திற்கு சென்று அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று எச்சரித்துவிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த அனைத்து பலகைகளையும் அப்புறப்படுத்தினர்.
Samayam Tamil மாதிரி புகைப்படம்


அதன்பிறகு மதிய நேரத்தில் ஜல்லிக்கட்டு விடுவதாக தகவல் தெரிந்து எஸ்ஐ இளங்கோவன் இரண்டாவது முறையும் சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கூறி விட்டார். மீண்டும் மூன்றாவது முறை மாடுகளை அவிழ்த்து விடுவதாக தகவலறிந்த எஸ்ஐ இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்ற ஜல்லிக்கட்டு விழா குழுவினர்கள் மீது லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விழாக்குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்கள் தடியடி நடத்திய போலீஸார் மீது சரமாரியாக கல்வீசி தாக்கியதில் எஸ்ஐ இளங்கோவன் மீது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 10க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

''கலர் கலரா கோர்ட்டை மாட்டிக்கிட்டுதான் சுத்துனாரு'''... ட்ரெண்ட் வீடியோவால் கொந்தளிக்கும் பாஜக!

இதே போன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு இதே பகுதியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழா நடத்திய போது தடியடி நடத்தி கலைத்த அப்போதைய லால்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மீதும் இப்பகுதி மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி