ஆப்நகரம்

நெசவுத் தொழிலாளி கொலையின் அதிர்ச்சி பின்னணி - சேலம் அருகே பயங்கரம்!

சேலம் அருகே நெசவுத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 19 Feb 2019, 3:27 pm
சேலம் மாவட்டம் வலசையூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட சுந்தர்ராஜன் நெசவாளர் காலணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் சொந்தமாக நெசவுத் தொழில் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
Samayam Tamil Salem Murder


இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் வலசையூர் அடுத்து சுந்தரராஜன் காலணியில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த வீராணம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்து உள்ளதா? இல்லை வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்த செய்தி