விழுப்புரம் நகர பகுதியான இந்திரா வீதியில் வசிக்கும் மாறன் - யமுனா தம்பதியின் மகள் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். மேலும், பள்ளி மாணவி 'சிசுக்குரல்' என்ற குறும்படத்தில் நடித்து அதற்கான டீசர் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், தேவி தனது வீட்டிலேயே மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, மாணவியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்த அவரது பெற்றோர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேக இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாணவியின் பெற்றோர்கள் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் மகளின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என்று கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
நாற்காலி மேல் நின்று கழுத்தில் தூக்கு... பிரபல விஜே தீபிகா செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி
குறும்படத்தில் நடித்துள்ள பள்ளி மாணவி பாலியல் தொல்லை அல்லது காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாணவியின் பெற்றோர்கள் விழுப்புரம் டவுன் காவல் நிலையத்தில் மகளின் தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை என்று கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.
நாற்காலி மேல் நின்று கழுத்தில் தூக்கு... பிரபல விஜே தீபிகா செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி
குறும்படத்தில் நடித்துள்ள பள்ளி மாணவி பாலியல் தொல்லை அல்லது காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.