ஆப்நகரம்

அந்த கடிதம் உண்மையா..? தடயவியல் சோதனை செய்ய போலீசார் முடிவு...

கோவை மாணவி தற்கொலை வழக்கில் தொடர்பான ஆதாரத்தை ஆய்வு செய்ய போலீசார் முடிவு

Samayam Tamil 16 Nov 2021, 6:38 pm
கோவையில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அந்த மாணவி முன்னாள் படித்த தனியார் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மாணவி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Samayam Tamil coimbatore student suicide


இச்சம்பவம் தொடர்பாக கோவை மாவட்ட வடக்கு சரக துணை கமிஷனர் ஜெயசந்திரன் கூறுகையில், இந்த வழக்கில் பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அழைத்து செல்லப்பட்டு உள்ளார் என்றும் மாணவி தற்கொலை தொடர்பாக துண்டு சீட்டு கிடைத்ததாகவும் அதில் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் யாரேனும் இருக்கிறார்களா? என்ற விசாரணையானது நடைபெற்று வருகிறது.

முன்னதாக, மாணவியின் தற்கொலை தொடர்பாக கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த கடிதத்தில் "யாரையும் சும்மாவிடக்கூடாது" என்று குறிப்பிட்டு, ரித்துவின் தாத்தா, எலிசா சாரின் தந்தை மற்றும் சம்மந்தப்பட்ட ஆசிரியரை என குறிப்பிட்டிருந்தது.

'அந்த கடிதம் பொய்'... கோவை மாணவியின் தந்தை உருக்கமான பேட்டி..!

ஆனால், தற்கொலைக்கும் அந்த கடிதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மாணவியின் தந்தை கூறியிருந்தார். இந்நிலையில், மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ள உண்மை தன்மையை அறிய, தடயவியல் சோதனைக்கு அனுப்ப காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி