ஆப்நகரம்

சாத்தான்குளம் வழக்கு: சிறையில் உள்ள காவலருக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் மூச்சுத்திணறலால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.

Samayam Tamil 10 Feb 2023, 3:17 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
Samayam Tamil sathankulam case


இதனையடுத்து தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 46சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கில் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்... வழக்கே முடியல... டிஐஜியின் அதிரடி..!

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ், காவலர் வெயிலுமுத்து உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர் வெயிலுமுத்து மூச்சு திணறல் காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக மூச்சு திணறல் இருந்து வந்த நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை வழக்கு விசாரணை நடந்து வந்தபோது சிறையில் இருந்தபடியே உடல்நலம் குன்றிய நிலையில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சாத்தான்குளம் தந்தை மகன் - கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றதும் குறிப்பிடதக்கது.

அடுத்த செய்தி