ஆப்நகரம்

சென்னையில் குற்றப்பிரிவு காவலர் தூக்கிட்டு தற்கொலை... பரிதவிக்கும் மனைவி, குழந்தைகள்

சென்னை மணலி பகுதியில் போதையில் இருந்த குற்றப்பிரிவு காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Samayam Tamil 5 Jun 2022, 4:02 pm
சென்னை, மணலி காவலர் குடியிருப்பில் வசித்தவர் சிவக்குமார் (35). இவர், 2009ம் ஆண்டில், தமிழ் நாடு காவல் துறையில் சேர்ந்து ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil sivakumar


இவரின் மனைவி சங்கீதா (25), இவர்களுக்கு புகழ் (5) மற்றும் 7 மாத பெண் குழந்தை வைசாலி ஆகிய பிள்ளைகள் உள்ளனர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. இவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி ஆகும்.

இந்த நிலையில், கடந்த 31ம் தேதி சிவக்குமார், குடும்பத்துடன், உசிலம்பட்டிக்கு சென்றார். அங்கு திருவிழாவில் கலந்துகொன்டு சென்னை திரும்பினார். இன்று காலை, அவரின் வீட்டில் உள்ள அறையில் உள்பக்கம் தாழிட்டுக்கொண்டு சிவக்குமார் இருந்தார்.

காலை வெகு நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. கதவை தட்டிப்பார்த்தும் , சிவக்குமார் வரவில்லை. சந்தேகம் அடைந்து, மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் பிணமாக கிடந்தார்.

38 வயசுதான்... உல்லாச வாழ்க்கை... ஒரு நொடியில் மாறிப்போன 'குடியாத்தம் குயின்' கதை

இதைபார்த்து, அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிவு செய்த போலீசார், ஊருக்கு சென்று திரும்பிய நிலையில், மதுப்போதையில் அவர் தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது. மேலும், சிவகுமார் குடும்ப பிரச்சினையால் த்ரோளை செய்துகொண்டாரா? பணி அழுத்தமா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல... யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து 'சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 அல்லது மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104 ஆகிய எண்ணிற்கு தொடபு கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி