ஆப்நகரம்

பொள்ளாச்சி கொலை வழக்கில் கைதான சதீஷ்குமாருக்கு, நீதிமன்றம் அளித்த உத்தரவு இதுதான்!

கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் விவகாரத்தில், நீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Apr 2019, 9:03 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் மாணவியின் உறவினர் சதீஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன்.
Samayam Tamil Accust Sathish


வட்டித் தொழில் செய்து வந்துள்ளார். கொல்லப்பட்ட மாணவியும், சதீஷ்குமாரும் சிறு வயது முதல் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறொரு பெண்ணை சதீஷ்குமார் திருமணம் செய்து கொண்டார். தற்போது 2 வயதில் மகள் இருக்கிறாள்.

பொள்ளாச்சி மாணவி கொல்லப்பட்டதற்கு காரணம் இதுதான் - அதிரவைக்கும் பின்னணி!

இந்த சூழலிலும் அந்த மாணவியிடம் தனது காதலை சதீஷ் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த மாணவிக்கு வேறு ஒருவருடன் நிச்சயதர்த்தம் நடைபெற்றுள்ளது.

இதனால் கோபமடைந்த சதீஷ் மாணவியை தனியே அழைத்துச் சென்று, தகராறு ஏற்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து மாணவியின் உடல் புதர் ஒன்றில் இருந்து மீட்டெடுத்தது.

இதனைத் தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து, கொலையாளி சதீஷ்குமாரைக் கைது செய்தனர். பின்னர் பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜேஎம்2ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சதீஷை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி ரேவதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி