ஆப்நகரம்

பொள்ளாச்சி வழக்கு; 15 நாட்களாக உள்ளூர் போலீஸார் ஏன் விசாரணை செய்யவில்லை?

வழக்கில் கைதாகியுள்ள முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது. கடந்த 15 நாட்களாக இதை உள்ளூர் போலீசார் ஏன் செய்யவில்லை என தற்போது கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

Samayam Tamil 13 Mar 2019, 6:40 pm
வழக்கில் கைதாகியுள்ள முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகிறது. கடந்த 15 நாட்களாக இதை உள்ளூர் போலீசார் ஏன் செய்யவில்லை என தற்போது கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
Samayam Tamil sexual harrasment


முன்னதாக பொள்ளாச்சி வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக திமுக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தன் மீது குற்றம் இருந்தால் சிபிஐ என்ன இண்டர்போல் கூட வழக்கை விசாரணை செய்யட்டும் என்றார்.

உள்ளூர் போலீஸோ அல்லது சிபிசிஐடியோ யார் விசாரித்தாலும் உண்மை வெளிவர வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் அதிமுக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டு உள்ளதால் வழக்கை வேண்டுமென்றே திசை திருப்பி விசாரணையை தமாதப்படுத்துகின்றனர் என மற்றொரு தரப்பு கூறுகிறது. பிடிபட்ட காமுகர்கள் தவிர வேறு சிலரும் இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

அடுத்த செய்தி