ஆப்நகரம்

Pollachi Case: பொள்ளாச்சி வழக்கில் திருப்பம் : ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் வெளியானதை அடுத்து, கைது, போராட்டம், பாதுகாப்பு அதிகரிப்பு என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் மீது வழகு பதியப்பட்டுள்ளது.

Samayam Tamil 14 Mar 2019, 6:22 pm
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் வெளியானதை அடுத்து, கைது, போராட்டம், பாதுகாப்பு அதிகரிப்பு என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil pollachi video


இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடவியல் துறையிடம் ஆய்விற்காக ஒப்படைத்துள்ளனர். குற்றவாளிகள் மீது மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஸ்டாலின் மருமகன் கைது?
இந்த வழக்கு விவகாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி