ஆப்நகரம்

பொள்ளாச்சி பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த நபர் மீது புகார்

சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் தன்னை வாலிபர் ஒருவர் ஆபாசமாக படம் எடுத்து ரூ.56 லட்சம் வரை பறித்துக் கொண்டதாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 18 Jul 2019, 12:48 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆபாசமாக படம் எடுத்து ரூ.56 லட்சம் பணம் பறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Sexual harassment


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாக அளிக்கப்பட்ட புகாரில், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் தான் எனது சொந்த ஊர். எனக்க கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நானும், எனது கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டோம்.

தற்போது நான் சென்னை கிண்டியில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். அதே நிறுவனத்தில் பணியாற்றிய கிஷோர் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. தன்னை திருமணம் செய்துகொள்வதாக கிஷோர் அளித்த வாக்குறுதியை நம்பி அவருடன் பல பகுதிகளில் சுற்றினேன்.

கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றிற்கு என்னை அழைத்துச் சென்ற கிஷோர், என்னுடன் உறவு மேற்கொண்டார். ஆனால், தற்போது என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்து வருகிறார். மேலும் நாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை எனக்கு தெரியாமல் பதிவு செய்து வைத்துள்ளார்.

புகைப்படம், வீடியோவை காட்டி என்னிடம் இருந்து ரூ.56 லட்சத்தை பறித்துவிட்டார். திருமணம் செய்துகொள்ள கேட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். கிஷோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவரிடம் இருந்து பணம், வீடியோ ஆதரங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி