ஆப்நகரம்

சென்னை அருகே துப்பாக்கிச் சூடு: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சென்னை தாம்பரம் அருகே பட்டப்பகலில் கல்லூரி மாணவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 5 Nov 2019, 4:28 pm
சென்னை: சென்னை தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Samayam Tamil பலியான மாணவர்
பலியான மாணவர்


சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், தனது நண்பரான விஜய் வீட்டுக்கு முகேஷ் இன்று சென்றுள்ளார்.

சென்னை : காதலுக்கு சாதியில்லை... ஆனால் பெற்றோருக்கு.? புது மாப்பிளை கழுத்தறுத்துக் கொலை...

முகேஷ் அவரது நண்பர் விஜய் ஆகியோர் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருந்ததாகவும், விஜய்யின் சகோதரர் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளதாகவும் தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது, நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு முகேஷ் போராடிக் கொண்டிருந்துள்ளார். இதனிடையே, விஜய் வீட்டை விட்டு வெளியே ஒடி தலைமறைவாகி விட்டார்.

போலீஸ் பொண்டாட்டிக்கா இந்த நிலைமை? செமயா மாட்டிக் கிட்ட கணவர்!

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக முகேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவையில் நாயை பிரிய மனமில்லாமல் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்ட வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக விஜய்யின் சகோதரர்கள் இருவரை கைது செய்துள்ள தாழம்பூர் போலீசார், தலைமறைவாக உள்ள விஜய்யை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி