ஆப்நகரம்

கோழிகளுக்கு விஷம் வைத்து கொலை: உடற்கூறு ஆய்வில் சிக்கிய தந்தை, மகன்..!

திருச்சியில் கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிக்கிய சம்பவம்

Samayam Tamil 8 Feb 2022, 7:05 pm
திருச்சி மாவட்டம் துறையூர் வைரிசெட்டிபாளையம் அருகே உள்ள காட்டுகொட்டகை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (40). இவருக்கு கொள்ளிமலை செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் அதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி (57) என்பவருக்கும் நிலம் உள்ளது. பெரியசாமிக்கு அவரது நிலத்தில் ஆடு, மாடு , கோழிகள் வளர்த்து வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகறாரு ஏற்ப்பட்டு வந்தது.
Samayam Tamil trichy crime news


இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெரியசாமி தனது மனைவியுடன் வௌியில் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது பெரியசாமி வளர்த்து வந்த 9 கோழிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதில் சந்தேகம் அடைந்த பெரியசாமி உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் உப்பிலியபுரம் போலீசார் கோழிகளை எடுத்துச்சென்று கால்நடை மருத்துவர்களை கொண்டு உடற்கூறு ஆய்வு நடத்தினர். ஆய்வின் முடிவில் கோழிகள் எலி விஷம் வைத்து கொல்லப்பட்டது தொிய வந்தது.

'அல்லாஹு அக்பர்'... காவி மிரட்டலுக்கு நடுவே கர்ஜனை ... பதட்டத்தில் கர்நாடகா

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அரிசியில் எலி விஷத்தை தடவி கோழிகளுக்கு துாவிய கிருஷ்ணசாமியும், அவரது மகன் பிரபு (31) ஆகியோர் கொன்றது தொிய வந்தது. இருவர் மீதும் உப்பிலியபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அடுத்த செய்தி