ஆப்நகரம்

கர்ப்பிணி என்றும் பாராமல்... குமரியில் கொடுமை... பதைபதைக்கும் வீடியோ..!

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே கர்பிணி பெண் மற்றும் அவரது குடும்பத்தாரை இரண்டு வாலிபர்கள் கம்பியால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 16 Jun 2022, 3:29 pm
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை அடுத்த கேரளாபுரத்தை சேர்ந்தவர் கில்பர்ட் ராஜன். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஏஞ்சல் சகாரின் என்பவருக்கும் வழிப்பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
Samayam Tamil kanyakumari woman beaten


இந்த நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை கில்பர்ட் ராஜன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டின் முன் அத்துமீறி கையில் இரும்பு கம்பியுடன் வந்த ஏஞ்சல் சகாரின் மற்றும் அவரது தம்பி பிராங்கிளின் இருவரும் கில்பர்ட் ராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

கில்பர்ட் ராஜனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த வந்து தடுக்க முயன்ற அவரது மனைவி 7-மாத கர்ப்பிணியான பிரதிஷா டேனி, தாயார் ஸ்டெல்லா மேரி, அண்ணன் கிறிஸ்டோபரையும் அவர்கள் கம்பியால் சரமாரி தாக்கியுள்ளனர்.

பல பெண்களை ஏமாற்றி... செக்ஸ் அனுபவ கதையை எழுதிய 'விபரீத விக்ரம்'... பெண்களே உஷார்..!

இதில், நான்கு பேரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இரு தரப்பு புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட ஏஞ்சலின் சகாரின் அவரது தம்பி பிராங்கிளின் மற்றும் கில்பர்ட் ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும், கில்பர்ட் ராஜன் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி தாக்கப்படும் அதிர்ச்சிகரமான சமுக ஊடகங்களில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

அடுத்த செய்தி