ஆப்நகரம்

காதல் திருமணம் செய்துகொண்ட கர்ப்பிணி தற்கொலை... கூடுவாஞ்சேரி அருகே சோகம்

கூடுவாஞ்சேரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jul 2022, 11:17 am
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21). இவரது மனைவி கோடீஸ்வரி (வயது 21). காதலித்து வந்த இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
Samayam Tamil உயிரிழந்த கர்ப்பிணி


சஞ்சய் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தினம் தோறும் குடித்துவிட்டு மனைவி கோடீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

இந்நிலையில், மனமுடைந்த கோடீஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஓஎம்ஆரில் அதிர்ச்சி... ஐ.டி. பெண் ஊழியர் 24வது மாடியில் இருந்து குதித்து மரணம்..!

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்படவுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி